Newsசிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் - பொது மக்களுக்கு...

சிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அடுத்த வாரம்வரை வெள்ள நெருக்கடி தொடரலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் 23 வட்டாரங்களில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) பார்வையிட்டார்.

குடியிருப்பாளர்களுக்கு அவசர உதவியாக 680 டொலர் ரொக்கம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

என்றாலும், வெள்ளத்தைச் சமாளிப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிலர் குறைகூறுகின்றனர்.

வெள்ளம் ஏற்படப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று-கூறிய அல்பனீசி அந்தப் பிரச்சினையைத் தமது அரசாங்கம் சமாளிக்கும் என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...