Newsகோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

கோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

-

கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோட்டாபய, ரணில், மகிந்த ஆகியோர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்புக்கு காவல்துறையின் நீர்த்தாரகை பீரங்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தொலை தூர இடங்களில் இருந்து வாகனங்களை கொண்டு வந்து வீணடிக்கும் விதம் குறித்து காவல்துறையினரிடம் கூட கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மேலதிக இராணுவ பாதுகாப்பை வழங்குவதற்காக விஜேராமவில் அமைந்துள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான இலக்கம் 117 கட்டடத்தை சிறிலங்கா கடற்படை அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...