Newsகோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

கோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

-

கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோட்டாபய, ரணில், மகிந்த ஆகியோர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்புக்கு காவல்துறையின் நீர்த்தாரகை பீரங்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தொலை தூர இடங்களில் இருந்து வாகனங்களை கொண்டு வந்து வீணடிக்கும் விதம் குறித்து காவல்துறையினரிடம் கூட கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மேலதிக இராணுவ பாதுகாப்பை வழங்குவதற்காக விஜேராமவில் அமைந்துள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான இலக்கம் 117 கட்டடத்தை சிறிலங்கா கடற்படை அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...