Newsஇலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

இலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

-

ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கூறப்படும் 77 பேர் மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

விரைவில் முடிவடையும் $300 மின்சாரக் கட்டண நிவாரணம்

மத்திய அரசின் எரிசக்தி கட்டண தள்ளுபடி அடுத்த ஆண்டு முடிவடையும் என்பதை பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2024/25...