Newsஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் - சபாநாயகர்

ஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் – சபாநாயகர்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...