Newsஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

ஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S.கணுகல குறிப்பிட்டார்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...