Newsஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

ஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S.கணுகல குறிப்பிட்டார்.

Latest news

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

மருந்துகள் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதியில் நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளது, மேலும் சில பொதுவான மருந்துகள் அதிக உடல்...

கிராமப்புற விக்டோரியா காட்டுத்தீ குறித்து அவசர எச்சரிக்கை

தென்மேற்கு விக்டோரியாவின் Gellibrand பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Carlisle...

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...

வட்டி விகிதங்களை உயர்த்தும் ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகள்

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு முன்னதாக, கடன் விகிதங்களை மீண்டும் உயர்த்த NAB வங்கி முடிவு செய்துள்ளது . அதன்படி, நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை...

கடுமையான வெப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி

மெல்பேர்ண் பூங்காவில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் வெளிப்புற போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். பிற்பகல்...