Newsஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

ஜனாதிபதி கோட்டாபயவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S.கணுகல குறிப்பிட்டார்.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...