Newsஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

-

முன்னாள் மூத்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து முன்னர் வெளிவந்த ‘சண்டே லீடர்’ வார ஏட்டின் குழுமத்துக்கு நெருக்கமான இணையத்தளமே இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு நாட்டின் ஜனாதிபதியாக மிதவாதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயம் இருப்பதாக அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அநுர பிரியதர்சன யாப்பாவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி பெருமளவிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேட்ட போது, அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்கவும் அரச தலைவர் தேர்தலில் போட்டடியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முதல் 5 மொழிகள் இதோ!

ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்ற முதல் 5 வெளிநாட்டு மொழிகள் பெயரிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியர்களிடையே மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்...

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...

Anzac தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோர்

அன்சாக் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் நகரங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகளுக்கு சூரிய உதயத்திற்கு முன் குவிந்தனர். மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற...

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

மெல்போர்ன் பெண்களைப் பாதுகாக்க மத்திய அரசின் அழைப்பு

விக்டோரியாவில் பெண்கள் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. மெல்போர்ன் இரண்டு குழந்தைகளின் தாயான ஜேட் ஹோவர்ட்,...