Newsநன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்!

நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்!

-

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி, எப்படியும் ஜூலை 20 இல் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று சிங்கள வார ஏடு ஒன்று உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரணில் விக்கிரமசிங்க மணலில் குளவி சுழலும் காலத்தை கடந்து செல்கின்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைகளால் அவரும் அவரது கட்சியினரும் படுதோல்வி அடைந்தனர். ஒரு ஆசனம் கூட கிடைக்காமல் அவரும் வீட்டுக்கு சென்று விட்டார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தால் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. தனி ஒரு மனிதனாக ரணில் விக்கிரமசிங்க அதே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் தற்போது அரசியலில் விளையாடுகின்றார்.

மே 9 அன்று ‘கோட்டா கோகம’ கிராமத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினையாக, பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அதன் விளைவாக பொதுஜன பெரமுன அரசின் ஒரே மீட்பராக ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுக்க எங்களுக்கு பைத்தியமா என்று கூச்சலிட்ட அமைச்சர்கள் பின்னர் அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்று அறிவித்தனர். அரசுடன் ரணில் இணைந்தது பிரதமராக இருப்பதற்கு அல்ல. அரச தலைவராக வருவதற்காகவே.

அவர் பிரதமர் பதவியை ஏற்றவுடனேயே ‘கோட்டா கோகம’ கிராமத்துக்கு வசதிகள் செய்து தர ஒரு குழுவையும் நியமித்தார். கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள், கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் பதவியில் இருந்து அகற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர் எப்போதும் அறிந்திருந்தார்.

அமைச்சர்களின் வீடுகளை எரித்ததன் பின்விளைவாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இப்போது தனது பூர்வீக வீட்டை எரித்ததன் பிரதிபலனாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

ரணிலின் பாதை வரை படத்தின்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

வீதிப் போராளிகள் எடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதை வரைபடம் தீர்மானிக்கப்படும். ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் இரண்டாவது தடவையாக வீசிய பொதுமக்களின் சுனாமி அலை அரச தலைவரின் மாளிகைக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த தடையையும் அழித்த போது கோட்டாபய ராஜபக்ச தனது பையில் சிக்கியதை மாத்திரம் எடுத்துக்கொண்டு துறைமுகத்திற்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் அவரது உதவிக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல் வந்தது.

நாடு எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் இடைக்கால அனைத்து அரசாங்கத்தின் ஊடாக முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துமாறு இளையோர்கள் கோருகின்றனர். அதையும் தாண்டி, ஒரு அமைப்பு மாற்றத்தை, அமைப்பில் மாற்றத்தை உருவாக்குவது எதிர்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும். நிறைவேற்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் பாதை வரைபடத்தை பின்பற்றத் தவறினால், அவரும் இந்து சமுத்திரத்தில் குதிக்க வேண்டியிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...