Newsநன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்!

நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்!

-

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி, எப்படியும் ஜூலை 20 இல் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று சிங்கள வார ஏடு ஒன்று உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரணில் விக்கிரமசிங்க மணலில் குளவி சுழலும் காலத்தை கடந்து செல்கின்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைகளால் அவரும் அவரது கட்சியினரும் படுதோல்வி அடைந்தனர். ஒரு ஆசனம் கூட கிடைக்காமல் அவரும் வீட்டுக்கு சென்று விட்டார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தால் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. தனி ஒரு மனிதனாக ரணில் விக்கிரமசிங்க அதே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் தற்போது அரசியலில் விளையாடுகின்றார்.

மே 9 அன்று ‘கோட்டா கோகம’ கிராமத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினையாக, பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அதன் விளைவாக பொதுஜன பெரமுன அரசின் ஒரே மீட்பராக ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுக்க எங்களுக்கு பைத்தியமா என்று கூச்சலிட்ட அமைச்சர்கள் பின்னர் அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்று அறிவித்தனர். அரசுடன் ரணில் இணைந்தது பிரதமராக இருப்பதற்கு அல்ல. அரச தலைவராக வருவதற்காகவே.

அவர் பிரதமர் பதவியை ஏற்றவுடனேயே ‘கோட்டா கோகம’ கிராமத்துக்கு வசதிகள் செய்து தர ஒரு குழுவையும் நியமித்தார். கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள், கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் பதவியில் இருந்து அகற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர் எப்போதும் அறிந்திருந்தார்.

அமைச்சர்களின் வீடுகளை எரித்ததன் பின்விளைவாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இப்போது தனது பூர்வீக வீட்டை எரித்ததன் பிரதிபலனாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

ரணிலின் பாதை வரை படத்தின்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

வீதிப் போராளிகள் எடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதை வரைபடம் தீர்மானிக்கப்படும். ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் இரண்டாவது தடவையாக வீசிய பொதுமக்களின் சுனாமி அலை அரச தலைவரின் மாளிகைக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த தடையையும் அழித்த போது கோட்டாபய ராஜபக்ச தனது பையில் சிக்கியதை மாத்திரம் எடுத்துக்கொண்டு துறைமுகத்திற்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் அவரது உதவிக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல் வந்தது.

நாடு எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் இடைக்கால அனைத்து அரசாங்கத்தின் ஊடாக முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துமாறு இளையோர்கள் கோருகின்றனர். அதையும் தாண்டி, ஒரு அமைப்பு மாற்றத்தை, அமைப்பில் மாற்றத்தை உருவாக்குவது எதிர்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும். நிறைவேற்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் பாதை வரைபடத்தை பின்பற்றத் தவறினால், அவரும் இந்து சமுத்திரத்தில் குதிக்க வேண்டியிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறிய பெண் கடும் குளிரால் மரணம்

ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண்...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கு Netflix முன்னிலை

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்களும் முயற்சி செய்துவரும் நிலையில், இந்த போட்டியில் Netflix முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பகுதியை...