Newsஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் - காரணம் வெளியானது

ஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் – காரணம் வெளியானது

-

உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதும் ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ’விக்ரம்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் சில பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற ஆஸ்திரேலியா அமைச்சரை கமல் சந்தித்ததாகவும் கமலஹாசனுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலியாவில் தனது KH நிறுவனத்தின் கதர் தயாரிப்பு ஆடைகளை விற்பனை செய்வது குறித்தும் அவர் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...