Breaking Newsயார் இந்த டலஸ் அழகப்பெரும?

யார் இந்த டலஸ் அழகப்பெரும?

-

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அரச தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் டலஸ் அழகப்பெரும தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்ட விபரம்:

அரச தலைவர் வேட்பாளர் டலஸ் தம்ம குமார அழகப்பெரும 14.05.1959 அன்று மாத்தறை திக்வெல்லவில் பிறந்தார். அவருக்கு தற்போது வயது 63. பல்கலைக்கழக காலத்தில் இருந்து அரசியல் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான டலஸ் அழகப்பெரும, சந்திரிகா குமாரதுங்க அரசு காலத்தில் அரசியல்வாதியானார்.

டலசின் பெற்றோர்கள் இருவரும் உள்ளூர் பாடசாலைகளின் அதிபர்களாக இருந்தனர். தந்தை கரோலிஸ் அழகப்பெரும மற்றும் தாயார் அஸ்லின் அழகப்பெரும.

மாத்தறை, புனித சேர்வைஸ் கல்லூரியின் பழைய மாணவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியை கற்றார். பின்னர் அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்து ஒரு மாணவர் ஆர்வலராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் புரட்சிகர கலைச் சங்கத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய பின்னர், பிரபல பாடகியும் மேடை நடிகையுமான பிரதீபா தர்மதாசாவை டலஸ் அழகப்பெரும திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிமா, கௌசிக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

டலஸ் அழகப்பெரும தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்து, புரட்சிகர கருத்துக்களை வெளிப்படுத்தும் செய்தித்தாள்களில் ஒரு எழுத்தாளராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார், அவர் ‘யுக்திய’ மற்றும் ‘ஹிரு’ போன்ற மாற்று பத்திரிகைகளில் இணைந்தார். அவரது சமகால பத்திரிகை சகாக்களில் விமல் வீரவன்ச, சுனில் மாதவ பிரேமதிலக்க, ரோஹித பாஷன போன்றவர்கள் அடங்குவர்.

சிறிலங்காவில் ஒரு புதிய சகாப்தம் 1994 ஆம் ஆண்டு உருவாகியது. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்க்க சந்திரிகா குமாரதுங்கவுக்கு டலஸ் அழகப்பெரும ஆதரவளித்தார். எவ்வாறாயினும், பின்னர் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தில் ஏமாற்றமடைந்து சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். அப்போது அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை டலஸ் அழகப்பெரும கற்றார். ஆனால் அவர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மாத்தறை மாவட்ட உறுப்பினராக மீண்டும் அரசியல் களத்தில் நுழைந்த அவர், பல அமைச்சர் பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர். நாளை புதன்கிழமை (20.07.2022) நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...