Newsஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் - காரணம் வெளியானது

ஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் – காரணம் வெளியானது

-

உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதும் ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ’விக்ரம்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் சில பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற ஆஸ்திரேலியா அமைச்சரை கமல் சந்தித்ததாகவும் கமலஹாசனுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலியாவில் தனது KH நிறுவனத்தின் கதர் தயாரிப்பு ஆடைகளை விற்பனை செய்வது குறித்தும் அவர் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...