Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

மெல்பேர்ணில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து

மெல்பேர்ணில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் Truganina-இல்...

மெல்பேர்ண் போலீஸ் நினைவுச்சின்னத்தை தாக்கிய நாசக்காரர்கள்

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா போலீஸ் நினைவுச்சின்னம் வண்ணப்பூச்சால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நாசவேலைச் செயலை ஒரு குழு...