Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அழிந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்

பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர். உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை...

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

மாநிலங்களில் பள்ளி விடுமுறைகள் ஏன் ஒரே மாதிரியாக இல்லை?

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி விடுமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை என்பது குறித்து மாநில கல்வித் துறைகள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

Anzac பாலத்தில் எதிர் திசையில் சைக்கிள் ஓட்டினால் கடும் அபராதம்

சிட்னியின் அன்சாக் பாலத்தில் தவறான வழியில் சைக்கிளை ஓட்டிய ஒருவருக்கு $10,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 வயது நபர் தனது சைக்கிளை கார்களை நோக்கி ஓட்டிச்...