Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

மெல்பேர்ணில் உள்ள Coles-இல் திருடர்களைப் பிடிக்க புதிய வழிகள்

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Coles, திருடர்களைப் பிடிக்க பல நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகளை சோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது மெல்பேர்ணில் உள்ள...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...