Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...