Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...