Breaking Newsயார் இந்த டலஸ் அழகப்பெரும?

யார் இந்த டலஸ் அழகப்பெரும?

-

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அரச தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் டலஸ் அழகப்பெரும தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்ட விபரம்:

அரச தலைவர் வேட்பாளர் டலஸ் தம்ம குமார அழகப்பெரும 14.05.1959 அன்று மாத்தறை திக்வெல்லவில் பிறந்தார். அவருக்கு தற்போது வயது 63. பல்கலைக்கழக காலத்தில் இருந்து அரசியல் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான டலஸ் அழகப்பெரும, சந்திரிகா குமாரதுங்க அரசு காலத்தில் அரசியல்வாதியானார்.

டலசின் பெற்றோர்கள் இருவரும் உள்ளூர் பாடசாலைகளின் அதிபர்களாக இருந்தனர். தந்தை கரோலிஸ் அழகப்பெரும மற்றும் தாயார் அஸ்லின் அழகப்பெரும.

மாத்தறை, புனித சேர்வைஸ் கல்லூரியின் பழைய மாணவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியை கற்றார். பின்னர் அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்து ஒரு மாணவர் ஆர்வலராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் புரட்சிகர கலைச் சங்கத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய பின்னர், பிரபல பாடகியும் மேடை நடிகையுமான பிரதீபா தர்மதாசாவை டலஸ் அழகப்பெரும திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிமா, கௌசிக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

டலஸ் அழகப்பெரும தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்து, புரட்சிகர கருத்துக்களை வெளிப்படுத்தும் செய்தித்தாள்களில் ஒரு எழுத்தாளராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார், அவர் ‘யுக்திய’ மற்றும் ‘ஹிரு’ போன்ற மாற்று பத்திரிகைகளில் இணைந்தார். அவரது சமகால பத்திரிகை சகாக்களில் விமல் வீரவன்ச, சுனில் மாதவ பிரேமதிலக்க, ரோஹித பாஷன போன்றவர்கள் அடங்குவர்.

சிறிலங்காவில் ஒரு புதிய சகாப்தம் 1994 ஆம் ஆண்டு உருவாகியது. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்க்க சந்திரிகா குமாரதுங்கவுக்கு டலஸ் அழகப்பெரும ஆதரவளித்தார். எவ்வாறாயினும், பின்னர் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தில் ஏமாற்றமடைந்து சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். அப்போது அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை டலஸ் அழகப்பெரும கற்றார். ஆனால் அவர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மாத்தறை மாவட்ட உறுப்பினராக மீண்டும் அரசியல் களத்தில் நுழைந்த அவர், பல அமைச்சர் பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர். நாளை புதன்கிழமை (20.07.2022) நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரு ஆஸ்திரேலிய தாவரவியல் பூங்காக்கள்

New York Times பத்திரிகையின்படி, Cranbourne-இல் உள்ள Royal Botanic பூங்காவும், சிட்னியின் oyal Botanic பூங்காவும் உலகின் 25 சிறந்த இடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்தத்...