Newsகோட்டா நல்லவர்; ரணில் கெட்டவர்: கண்டு பிடித்த பிரபலம்

கோட்டா நல்லவர்; ரணில் கெட்டவர்: கண்டு பிடித்த பிரபலம்

-

போராட்டக்காரர்களை அடக்கும் திறன் இருந்தும் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை என்றும் ஆனால், ரணில் பதவியேற்று 24 மணி நேரத்தில் தனது கைவரிசையை காட்டி விட்டார் என்று சிறிலங்கா இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயக்க கலாநிதி ஓமல்பே சோபித தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது. இது வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருந்தது. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

புதிய அரச தலைவர் பதவிப்பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை சரியான அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று அண்மையில் அனைத்துலக சமூகம் அரசுக்கு அறிவித்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில், ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கும் செயற்பாட்டாளர்கள் மீது நள்ளிரவில் ஆயுதப் படைகள் பயங்கரவாதக் குழுவின் பாணியில் தாக்குதல் நடத்தியது வெட்கக்கேடானது.

கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறே மக்கள் போராட்டத்தை அடக்கும் திறமை இருந்தது. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. கோட்டாபய ராஜபக்சவை விட புதிய அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான தீர்மானம் எடுப்பவர் என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது என்றார் அவர்.

Latest news

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...