Newsபுதிய அமைச்சரவை நியமனம் - முழுமையான விபரம்

புதிய அமைச்சரவை நியமனம் – முழுமையான விபரம்

-

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

முன்னதாக இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டு உறுதிமொழியை சற்றுமுன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய,

  • பிரதமர் தினேஸ் குணவர்தன உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும்,
  • டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்,
  • சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும்,
  • பந்துல குணவர்தன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும்,
  • கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
  • மஹிந்த அமரவீர விவசாய மற்றும் வனவள, வனப்பாதுகாப்பு அமைச்சராகவும்,
  • விஜயதாச ராஜபக்ஸ நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும்,
  • ஹரீன் பெர்ணான்டோ காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,
  • ரமேஷ் பத்திரண பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,
  • பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அமைச்சராகவும்,
  • அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராகவும்,
  • விதுர விக்ரமநாயக்க புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்,
  • கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,
  • நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,
  • ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
  • மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும்,
  • டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும்,
  • நலின் பெர்ணான்டோ வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்,பதவியேற்றுக் கொண்டுள்ளனர்

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...