Newsவிண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

விண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

-

அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து விலகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

உக்ரேன் விவகாரத்தின் தொடர்பில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பூசல் தொடரும் வேளையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 1998-ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பணியாற்றுகின்றன.

2024-ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா அதன் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கத் தொடங்கும் என்று அந்நாட்டு விண்வெளி அமைப்பின் புதிய தலைவர் யூரி போரிசொவ் (Yury Borisov) குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன்மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து விண்வெளி உட்பட சில அம்சங்களில் மட்டுமே அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பு பாதிக்கப்படவில்லை. அந்த ஒத்துழைப்பும் இனி துண்டிக்கப்படவுள்ளது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...