Newsவிண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

விண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

-

அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து விலகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

உக்ரேன் விவகாரத்தின் தொடர்பில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பூசல் தொடரும் வேளையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 1998-ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பணியாற்றுகின்றன.

2024-ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா அதன் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கத் தொடங்கும் என்று அந்நாட்டு விண்வெளி அமைப்பின் புதிய தலைவர் யூரி போரிசொவ் (Yury Borisov) குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன்மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து விண்வெளி உட்பட சில அம்சங்களில் மட்டுமே அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பு பாதிக்கப்படவில்லை. அந்த ஒத்துழைப்பும் இனி துண்டிக்கப்படவுள்ளது.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...