Newsஅவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

-

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பி.ப 5.20 மணி வரை இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டமைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்17ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனத்தின் மூலம் மேற்படி கட்டளைச்சட்டத்தின் IIஆம் பகுதியின் கீழ் இலங்கை முழுவதும் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...