Newsஜோசப் ஸ்டாலின் கைது - இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

ஜோசப் ஸ்டாலின் கைது – இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

-

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) பிற்பகல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் – தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...