Newsஜோசப் ஸ்டாலின் கைது - இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

ஜோசப் ஸ்டாலின் கைது – இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

-

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) பிற்பகல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் – தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Latest news

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

ஆஸ்திரேலியாவின் நிதி அமைப்பு கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமா?

ஆஸ்திரேலியாவின் பண விநியோக முறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் மிஷேல் புல்லக் எச்சரித்துள்ளார். சைபர் ஹேக்கர்கள் Quantum Computing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைகுறியாக்கப்பட்ட...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

குடல் பிரச்சினைகளுக்கு புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ள மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள்

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் குளுட்டன் சகிப்புத்தன்மை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, FODMAPகள் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் குழு, குளுட்டன் சகிப்புத்தன்மையால் ஏற்படும் குடல்...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...