Breaking Newsஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட...

ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட விசா

-

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன் குடும்பம் தங்கள் போராட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருந்த நிலையில் இன்று நிறந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 04 வருடங்களாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கடந்த கூட்டாட்சி தேர்தலின் போது தொழிற்கட்சி உறுதியளித்தது.

அதன்படி, அண்மையில் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களை பிலோலாவில் சந்தித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆஸ்திரேலியாவிற்கு தப்பி வந்த இந்த பெற்றோர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுள்ளனர்.

கடந்த வருடம், இளைய மகள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​அவர்களது விசாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...