Breaking Newsஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட...

ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட விசா

-

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன் குடும்பம் தங்கள் போராட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருந்த நிலையில் இன்று நிறந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 04 வருடங்களாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கடந்த கூட்டாட்சி தேர்தலின் போது தொழிற்கட்சி உறுதியளித்தது.

அதன்படி, அண்மையில் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களை பிலோலாவில் சந்தித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆஸ்திரேலியாவிற்கு தப்பி வந்த இந்த பெற்றோர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுள்ளனர்.

கடந்த வருடம், இளைய மகள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​அவர்களது விசாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...