Breaking Newsஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட...

ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட விசா

-

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன் குடும்பம் தங்கள் போராட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருந்த நிலையில் இன்று நிறந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 04 வருடங்களாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கடந்த கூட்டாட்சி தேர்தலின் போது தொழிற்கட்சி உறுதியளித்தது.

அதன்படி, அண்மையில் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களை பிலோலாவில் சந்தித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆஸ்திரேலியாவிற்கு தப்பி வந்த இந்த பெற்றோர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுள்ளனர்.

கடந்த வருடம், இளைய மகள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​அவர்களது விசாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...