Breaking Newsஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார்.

அவரை தேடும் வேட்டையை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.

ஏனென்றால் உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றி பொலிஸ் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Latest news

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் "What Were You Wearing?" என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...