Breaking Newsஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார்.

அவரை தேடும் வேட்டையை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.

ஏனென்றால் உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றி பொலிஸ் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Latest news

இப்போது Facebook இலும் மேம்பட்டுள்ள AI தொழிநுட்பம்

Facebook-இன் சமூக ஊடக தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் AI Meta, கடந்த சில மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளதாக Facebook நிறுவனர் Mark Zuckerberg கூறுகிறார். முதலில்...

டிரம்பின் முடிவால் ஆஸ்திரேலியா எவ்வாறு பாதிக்கப்படும்?

ஆஸ்திரேலிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஆரம்ப 10 சதவீத இறக்குமதி வரியை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று, டிரம்ப் பல...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...