Breaking Newsஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது மூத்த பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஒரு புதிய கையடக்க தொலைபேசி வாங்கியிருப்பதாகவும், அதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆக்டிவேட் செய்ய அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வருகிறது.

தனது பிள்ளைகள் அனுப்பும் குறுந்தகவல் போன்று தாயார்களை குறி வைத்து குறுந்தகவல் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனை நம்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பணம் கேட்பதாக நினைத்து பணத்தை பரிமாற்றம் செய்வதாகவும் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு இது போன்ற செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து உடனடியாக உறுதிப்படுத்துமாறும், எந்த ஒன்லைன் பணப் பரிமாற்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...