Breaking Newsஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது மூத்த பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஒரு புதிய கையடக்க தொலைபேசி வாங்கியிருப்பதாகவும், அதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆக்டிவேட் செய்ய அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வருகிறது.

தனது பிள்ளைகள் அனுப்பும் குறுந்தகவல் போன்று தாயார்களை குறி வைத்து குறுந்தகவல் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனை நம்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பணம் கேட்பதாக நினைத்து பணத்தை பரிமாற்றம் செய்வதாகவும் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு இது போன்ற செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து உடனடியாக உறுதிப்படுத்துமாறும், எந்த ஒன்லைன் பணப் பரிமாற்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...