Breaking Newsஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது மூத்த பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஒரு புதிய கையடக்க தொலைபேசி வாங்கியிருப்பதாகவும், அதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆக்டிவேட் செய்ய அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வருகிறது.

தனது பிள்ளைகள் அனுப்பும் குறுந்தகவல் போன்று தாயார்களை குறி வைத்து குறுந்தகவல் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனை நம்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பணம் கேட்பதாக நினைத்து பணத்தை பரிமாற்றம் செய்வதாகவும் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு இது போன்ற செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து உடனடியாக உறுதிப்படுத்துமாறும், எந்த ஒன்லைன் பணப் பரிமாற்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...