Breaking Newsஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது மூத்த பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஒரு புதிய கையடக்க தொலைபேசி வாங்கியிருப்பதாகவும், அதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆக்டிவேட் செய்ய அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வருகிறது.

தனது பிள்ளைகள் அனுப்பும் குறுந்தகவல் போன்று தாயார்களை குறி வைத்து குறுந்தகவல் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனை நம்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பணம் கேட்பதாக நினைத்து பணத்தை பரிமாற்றம் செய்வதாகவும் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு இது போன்ற செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து உடனடியாக உறுதிப்படுத்துமாறும், எந்த ஒன்லைன் பணப் பரிமாற்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...