Newsசீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை - திணறும் அரசாங்கம்

சீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை – திணறும் அரசாங்கம்

-

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்தபோது அறிவித்துள்ளார்.

சீனாவின் இந்த உளவுக் கப்பல் அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.
கப்பல் இப்போது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் நேரடியாக அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்துக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதில், ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று இராஜதந்திர விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு மூலம் இலங்கை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசர சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்தச் சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.

Latest news

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...