Newsசீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை - திணறும் அரசாங்கம்

சீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை – திணறும் அரசாங்கம்

-

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்தபோது அறிவித்துள்ளார்.

சீனாவின் இந்த உளவுக் கப்பல் அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.
கப்பல் இப்போது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் நேரடியாக அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்துக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதில், ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று இராஜதந்திர விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு மூலம் இலங்கை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசர சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்தச் சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...