Newsசீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை - திணறும் அரசாங்கம்

சீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை – திணறும் அரசாங்கம்

-

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்தபோது அறிவித்துள்ளார்.

சீனாவின் இந்த உளவுக் கப்பல் அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.
கப்பல் இப்போது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் நேரடியாக அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்துக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதில், ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று இராஜதந்திர விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு மூலம் இலங்கை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசர சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்தச் சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.

Latest news

ஈஸ்டர் ஆராதனைக்கு சென்ற 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர்கள் பயணித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து வடகிழக்கு...

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நற்செய்தி

ஆஸ்திரேலிய ஒயின் மீதான வரிகளை நீக்க சீனா நகர்ந்து, பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையை மீண்டும் திறக்கிறது. பல ஆண்டுகளாக இந்த வரிகளால் தடைப்பட்டிருந்த $1.1 பில்லியன்...

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருளை வாங்கும் முன் விலையை இருமுறை சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் விலைகள் தவறாகக்...

பாதகமான நிலையில் உள்ள காப்பீடு செய்யப்படாத ஆஸ்திரேலியர்கள்

தனியார் மருத்துவக் காப்பீடு இல்லாத ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில்...

வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய ஆய்வின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றும் குறைந்த...

1.7 பில்லியன் டாலர் லாட்டரி ஜாக்பாட்டை வென்ற அடையாளம் தெரியாத நபர்

அமெரிக்க வரலாற்றில் 8வது பெரிய ஜாக்பாட் லாட்டரி பரிசை ஒருவர் வென்றுள்ளார். நியூஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் இவர், லாட்டரி மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார். 302...