Newsசீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை - திணறும் அரசாங்கம்

சீன கப்பலை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை – திணறும் அரசாங்கம்

-

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்தபோது அறிவித்துள்ளார்.

சீனாவின் இந்த உளவுக் கப்பல் அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.
கப்பல் இப்போது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் நேரடியாக அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்துக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதில், ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று இராஜதந்திர விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு மூலம் இலங்கை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசர சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்தச் சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...