Breaking Newsஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் - இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் – இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண் வீட்டில் தனியாக வசித்தார். அவரது பெரிய வீட்டின் அருகே ஏராளமான கடைகளை வாடகைக்கு வழங்கி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் 2 மணியளவில் குறித்த பெண் வசித்த வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பான நபர் ஒருவர் கத்தியுடன் வெளியில் வருவதைப் பார்த்ததாகவும், அவரது கை அறுபட்டு இரத்தம் கசிந்ததனையும் அவதானித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை எனவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டமையினால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பொலிஸாரிடம் தகவல் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...