Breaking Newsஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் - இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் – இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண் வீட்டில் தனியாக வசித்தார். அவரது பெரிய வீட்டின் அருகே ஏராளமான கடைகளை வாடகைக்கு வழங்கி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் 2 மணியளவில் குறித்த பெண் வசித்த வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பான நபர் ஒருவர் கத்தியுடன் வெளியில் வருவதைப் பார்த்ததாகவும், அவரது கை அறுபட்டு இரத்தம் கசிந்ததனையும் அவதானித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை எனவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டமையினால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பொலிஸாரிடம் தகவல் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...