Newsவெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

வெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியபகுதிகளில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

திருகோணமலைக்கு அப்பால் சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடிக் படகு ஒன்று, கடற்படையின் P – 465 என்ற விரைவு படகால் இடைமறிக்கப்பட்டதுடன், அதிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 29 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் உட்பட 25 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 பேரும் அடங்குவர்.

அத்துடன், P 465 விரைவு படகின் மூலம் மேற்கொண்ட தொடர் சோதனையில் குறித்த மீன்பிடிப் படகுக்குக் கரையிலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த இருவர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றைக் கடற்படையின் P – 4443 என்ற விரைவு படகு மூலம் இடைமறித்து கடற்படையினர் சோதனையிட்டனர்.

அதன்போது, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், P – 4443 விரைவு படகு மூலம் மேற்கொண்ட சோதனையில், லங்காபட்டுன – வாழைத்தோட்டம் கடற்கரையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் நின்றிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த மொத்தச் சுற்றிவளைப்புகளில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், அம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கறைப்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை கடற்பகுதியில் கைதான 34 பேரும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளியில் கைதான இருவரும் குச்சவெளிப் பொலிஸாரிடமும் வாழைத்தோட்டம் கடற்கரையில் கைதான 10 பேரும் ஈச்சிலம்பற்றுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய விமான நிறுவனத்திற்கு என்ன நடக்கும்?

ஆஸ்திரேலியாவில் Rex Airlines விற்பனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த தனியார் முதலீட்டாளர்களும் விமான நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் எந்த தனியார்...

Credit Card பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அத்தியாவசிய கொள்முதல்களுக்கு மட்டுமே பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், பணத்தைப் பயன்படுத்தும்...

Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முக்கிய வங்கிகள்

நாட்டின் மூன்று முக்கிய வங்கிகள் Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, Commonwealth, NAB மற்றும் Westpac வங்கிகள் Australian Post உடன்...

பூனை போல நடந்து கொண்ட ஆஸ்திரேலிய ஆசிரியர்

வகுப்பறையில் பூனை போல நடந்து கொண்ட ஒரு ஆசிரியர் பற்றிய செய்திகள் குயின்ஸ்லாந்திலிருந்து வந்துள்ளன. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இந்த ஆசிரியை, தனது...

ஆஸ்திரேலியாவிற்கான புதிய சாலை வரி முறை அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் சாலைகளுக்கு ஒரு புதிய வரிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று நிதி மதிப்பாய்வு அறிக்கை அறிவிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக எரிபொருள் மீதான வரி வருவாய்...

பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரிய சிறுவன் மீண்டும் கைது!

50 தனித்தனி குற்றச்சாட்டுகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரை இந்த முறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதினைந்து வயது சிறுவன் 7 வாகனத்...