Newsவெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

வெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியபகுதிகளில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

திருகோணமலைக்கு அப்பால் சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடிக் படகு ஒன்று, கடற்படையின் P – 465 என்ற விரைவு படகால் இடைமறிக்கப்பட்டதுடன், அதிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 29 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் உட்பட 25 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 பேரும் அடங்குவர்.

அத்துடன், P 465 விரைவு படகின் மூலம் மேற்கொண்ட தொடர் சோதனையில் குறித்த மீன்பிடிப் படகுக்குக் கரையிலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த இருவர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றைக் கடற்படையின் P – 4443 என்ற விரைவு படகு மூலம் இடைமறித்து கடற்படையினர் சோதனையிட்டனர்.

அதன்போது, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், P – 4443 விரைவு படகு மூலம் மேற்கொண்ட சோதனையில், லங்காபட்டுன – வாழைத்தோட்டம் கடற்கரையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் நின்றிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த மொத்தச் சுற்றிவளைப்புகளில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், அம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கறைப்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை கடற்பகுதியில் கைதான 34 பேரும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளியில் கைதான இருவரும் குச்சவெளிப் பொலிஸாரிடமும் வாழைத்தோட்டம் கடற்கரையில் கைதான 10 பேரும் ஈச்சிலம்பற்றுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BTS இன் மெகா நிகழ்ச்சி

K-pop சூப்பர் குழுவான BTS, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் 79 நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு பெரிய உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள்

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் முழுவதும் "குறிப்பிடத்தக்க" போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கிறது. இது 55 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும்...