Newsஇலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

இலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

-

இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில், சந்தேக நபர்கள் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு 304,000 டொலர்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 67 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாரிய அளவிலான பொறியியல் நிறுவனத்தின் (SMEC) பிரதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

FBI – கனடா காவல்துறை – இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் காவல்துறையை இணைத்து இந்த மாபெரும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.

இதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் – வர்த்தக ஆணையமும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் கணித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...