Newsஇலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

இலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

-

இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில், சந்தேக நபர்கள் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு 304,000 டொலர்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 67 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாரிய அளவிலான பொறியியல் நிறுவனத்தின் (SMEC) பிரதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

FBI – கனடா காவல்துறை – இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் காவல்துறையை இணைத்து இந்த மாபெரும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.

இதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் – வர்த்தக ஆணையமும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் கணித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சிட்னி இசை விழாவில் ஒருவர் பலி – 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியின் Olympic Park-இல் நடைபெற்ற Dreamstate techno இசை விழாவில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் 40 வயதுடைய ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த...

பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது படுக்கையறைக்குள் மோதிய கார் – ஒருவர் பலி

பெர்த்தின் உள்-கிழக்கில் ஒரு வீட்டின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி கொல்லப்பட்டார். 53 வயதான Himali Gurung தூங்கிக்...