Newsஇலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

இலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

-

இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில், சந்தேக நபர்கள் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு 304,000 டொலர்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 67 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாரிய அளவிலான பொறியியல் நிறுவனத்தின் (SMEC) பிரதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

FBI – கனடா காவல்துறை – இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் காவல்துறையை இணைத்து இந்த மாபெரும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.

இதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் – வர்த்தக ஆணையமும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் கணித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...