Newsஜனனியின் நட்பு தான் வேண்டும் - GP முத்து கூறிய காரணம்

ஜனனியின் நட்பு தான் வேண்டும் – GP முத்து கூறிய காரணம்

-

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் இடையே உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் ஜிபி முத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரல் ரகங்கள் தான். தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்ட் ஆகத் தான் செய்கிறது.

அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார். இதற்காக அவர் கூறிய காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது.

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும். ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள். இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜனனி, “ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு உங்களை பிடிக்கும். இதனால் அதை பற்றி நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் நட்பு தொடர்பாக ஜிபி முத்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Latest news

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

உலகின் மிக நீண்ட வணிக விமானத்தை தொடங்கவுள்ள Qantas Australia

உலகின் மிக நீண்ட வணிகப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு வரும் Qantas-இன் புதிய விமானத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. Airbus A350-1000ULR என அழைக்கப்படும்...

சீன மின்சார பேருந்துகள் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

ஆஸ்திரேலியாவில் இயங்கும் சீனத் தயாரிப்பு மின்சார பேருந்துகள் நாட்டிற்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நோர்வே விசாரணையில், Yutong பேருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளை அணுக...

Grand Theft Auto VI பற்றி வெளியான முக்கிய தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது. முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games,...

Grand Theft Auto VI பற்றி வெளியான முக்கிய தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது. முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games,...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் NAB அதிகாரி

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றிற்காக NAB இன் முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 36 வயதான டிமோதி டோனி சுங்கர் என்ற அந்த...