Newsஜனனியின் நட்பு தான் வேண்டும் - GP முத்து கூறிய காரணம்

ஜனனியின் நட்பு தான் வேண்டும் – GP முத்து கூறிய காரணம்

-

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் இடையே உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் ஜிபி முத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரல் ரகங்கள் தான். தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்ட் ஆகத் தான் செய்கிறது.

அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார். இதற்காக அவர் கூறிய காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது.

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும். ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள். இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜனனி, “ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு உங்களை பிடிக்கும். இதனால் அதை பற்றி நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் நட்பு தொடர்பாக ஜிபி முத்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...