Newsஇலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

-

இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி ஆஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாதம் மற்றும் மக்கள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டின் நிமித்தமே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் ஆஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் தடுப்பதற்கும், இடையூறு செய்வதற்கும், இடைமறித்து திருப்பி அனுப்புவதற்கும், கூட்டுப்பொறுப்பை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 மே மாதம் முதல், ஆஸ்திரேலியாவிற்கு ஒழுங்கற்ற கடல்சார் குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 9ஆயிரம் இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...