Newsஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை - ஆஸ்திரேலியா

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை – ஆஸ்திரேலியா

-

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் ஆஸ்திரேலியா மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மோரிசன் அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாக வோங் குறை கூறினார்.

Latest news

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...

நெடுஞ்சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் பாதசாரிகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது 2007...