Newsஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை - ஆஸ்திரேலியா

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை – ஆஸ்திரேலியா

-

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் ஆஸ்திரேலியா மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மோரிசன் அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாக வோங் குறை கூறினார்.

Latest news

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....