Newsவடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் - ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

-

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ‘நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை’ அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும்,
வடக்கு, கிழக்கு போருக்கு பின்னரான மீள் குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதுமே குழுவின் பிரதான பணியாகும்.

இக்குழுவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை எதிர்காலத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...