Newsவடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் - ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

-

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ‘நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை’ அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும்,
வடக்கு, கிழக்கு போருக்கு பின்னரான மீள் குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதுமே குழுவின் பிரதான பணியாகும்.

இக்குழுவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை எதிர்காலத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...