Newsவடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் - ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

-

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ‘நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை’ அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும்,
வடக்கு, கிழக்கு போருக்கு பின்னரான மீள் குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதுமே குழுவின் பிரதான பணியாகும்.

இக்குழுவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை எதிர்காலத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Latest news

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல்...

பிரபலமான விக்டோரியா கடற்கரையில் இறந்து கிடக்கும் மீன்கள்

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெல்பேர்ணுக்கு கிழக்கே மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள லோச் ஸ்போர்ட் கடற்கரையில் அழுகிய...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த பொருளாதார நிபுணர்களின் கருத்து

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ANZ பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த ஆண்டு...

உலகில் அதிக பணமில்லா பயன்பாட்டைக் கொண்ட 10 நாடுகள்

ரொக்கமில்லா மாற்றுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய விரும்பும் முதல் 10 நாடுகள் குறித்து ForexBonuses ஆராய்ச்சி நடத்தியது. பல்வேறு நாடுகள் பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன...

அமெரிக்கா மீது வரிகளை விதித்த சீனா!

டொனால்ட் டிரம்பின் வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. சீனா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு...

தொலைபேசி அலாரத்தால் உயிர் தப்பிய மெல்பேர்ண் பெண்மணி

மெல்பேர்ணில் தனது தொலைபேசியின் அலாரத்தால் உயிர் காப்பாற்றப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. நேற்று காலை 6 மணியளவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய...