Newsமெல்போர்னில் கோவிட் தொற்றை மறைத்ததற்காக செவிலியருக்கு 25,000 டொலர் அபராதம்

மெல்போர்னில் கோவிட் தொற்றை மறைத்ததற்காக செவிலியருக்கு 25,000 டொலர் அபராதம்

-

மெல்போர்ன் செவிலியர் ஒருவர், தனக்கு கோவிட் தொற்று இருப்பதை அறிந்து முதியோர் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்ததற்காக 25,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

36 வயதான பெண்ணை இன்று Moorabbin நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரிசோதனைக்கு வருமாறும், முடிவுகள் கிடைக்கும் வரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் மருத்துவர் அறிவுறுத்திய போதிலும், இந்த நபர் 2020 ஜூலை 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் Highett இல் உள்ள Menarock முதியோர் காப்பகத்தில் பணிக்குச் சென்றார்.

தனக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று பணியிடத்திற்கு தெரிவித்தார். ஜூலை 30 அன்று, இந்த நபர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் அதன் குடியிருப்பாளர்களில் ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தில் கோவிட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...