Newsஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு குளிர்காலத்திற்குள் எரிவாயு விநியோகத்தை தடையின்றி பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் மற்றும் மாநில அரசுகளின் எரிசக்தி அமைச்சர்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, AEMO அல்லது ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை முகமைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க, தற்போதுள்ள பல சட்டங்கள் மாற்றப்பட உள்ளன.

எதிர்வரும் 02 வருடங்களில் எரிவாயு விலை சுமார் 40 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இந்த வருட வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கும் போது மத்திய திறைசேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் விடுத்த எச்சரிக்கையுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனிடையே, மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என விசாரிக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...