Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

-

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது.

இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார்.

அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Latest news

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...