Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

-

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது.

இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார்.

அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்து பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் கால்தடங்கள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள ஒரு பாறையில் பல டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாறை 20 ஆண்டுகளாகப் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது,...

$1க்கு 11,000 பொருட்களை வாங்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்களுக்கு கிட்டத்தட்ட 11,000 வீட்டு உபயோகப் பொருட்களை வெறும் $1க்கு வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பிரபல ஏல நிறுவனமான லாயிட்ஸ் ஏலத்தால் விரைவில் நடத்தப்படும்...

இலங்கையர்கள் அதிக காலம் வாழும் நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

இலங்கைக்கு வெளியே இலங்கையர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 700,000 இலங்கையர்கள் வசிக்கும் கிரேட் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சுமார் 320,000 இலங்கையர்கள் வசிக்கும்...

ஆய்வக சோதனையில் நடந்த விபரீதம் – விதிக்கப்பட்ட அபராதம்

மெல்பேர்ணில் உள்ள இளைஞர் கல்வி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் நடந்த ஒரு தவறான பரிசோதனைக்காக $45,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், செயிண்ட் கில்டா...

மெல்பேர்ணில் பூக்க உள்ள உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்

உலகின் மிகவும் துர்நாற்றம் வீசும் மலராகக் கருதப்படும் "பிண மலர்" (Corpse Flower), நேற்றிரவு (13) மெல்பேர்ணில் பூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்காள் வெளியாகியுள்ளன. மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் Bayside...

$1க்கு 11,000 பொருட்களை வாங்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்களுக்கு கிட்டத்தட்ட 11,000 வீட்டு உபயோகப் பொருட்களை வெறும் $1க்கு வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பிரபல ஏல நிறுவனமான லாயிட்ஸ் ஏலத்தால் விரைவில் நடத்தப்படும்...