Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

-

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது.

இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார்.

அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...