Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

-

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது.

இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார்.

அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...