Breaking NewsNSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

-

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மண்டபத்தில் கௌரவிக்கின்ற முதல் தமிழர் என்ற பெருமையுடன் முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

சிட்னியில் உள்ள ஒலிம்பிக் park-ல் Sports New South Wales ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்களும் அவர்களுடைய சில பொருட்களும் காட்சிப்படுத்தப்படும்.

ஜிம்னாஸ்ட் (gymnast) பிரசாந்த் செல்லதுறை 2006 மற்றும் 2010 நடைபெற்ற Commonwealth போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலக கோப்பை போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலகதரத்திலே 3 பதக்கங்களையும் வென்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே துடிதுடிப்புடன் இருந்த பிரசாந் தனது 5 வயதில் வீட்டின் கூரை மேல் அடிக்கடி ஏறி நிற்பதை பார்த்து வைத்தியரான தன் அம்மாவிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் ”இந்த பையன் ஜிம்னாஸ்டிக் செய்கிறாரா?” என கேட்ட போதுதான் அம்மாவிற்கு அந்த சிந்தனை தோன்றியது. இதன் பின்னரே பிரசாந்த் ஜிம்னாஸ்டிக் வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டார்.

தனது 11 வயதிலிருந்து New South Wales institute of Sport அமைப்பில் சேர்ந்து பயிற்சிபெற்று இந்த போட்டிகளில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44th Artistic Gymnastics World Championships, September 30 – October 6, 2013 in Antwerp/BEL

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...