Breaking NewsNSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

-

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மண்டபத்தில் கௌரவிக்கின்ற முதல் தமிழர் என்ற பெருமையுடன் முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

சிட்னியில் உள்ள ஒலிம்பிக் park-ல் Sports New South Wales ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்களும் அவர்களுடைய சில பொருட்களும் காட்சிப்படுத்தப்படும்.

ஜிம்னாஸ்ட் (gymnast) பிரசாந்த் செல்லதுறை 2006 மற்றும் 2010 நடைபெற்ற Commonwealth போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலக கோப்பை போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலகதரத்திலே 3 பதக்கங்களையும் வென்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே துடிதுடிப்புடன் இருந்த பிரசாந் தனது 5 வயதில் வீட்டின் கூரை மேல் அடிக்கடி ஏறி நிற்பதை பார்த்து வைத்தியரான தன் அம்மாவிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் ”இந்த பையன் ஜிம்னாஸ்டிக் செய்கிறாரா?” என கேட்ட போதுதான் அம்மாவிற்கு அந்த சிந்தனை தோன்றியது. இதன் பின்னரே பிரசாந்த் ஜிம்னாஸ்டிக் வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டார்.

தனது 11 வயதிலிருந்து New South Wales institute of Sport அமைப்பில் சேர்ந்து பயிற்சிபெற்று இந்த போட்டிகளில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44th Artistic Gymnastics World Championships, September 30 – October 6, 2013 in Antwerp/BEL

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...