News30,000 குழந்தைகளை உருவாக்கும் செயற்கை கருப்பை!

30,000 குழந்தைகளை உருவாக்கும் செயற்கை கருப்பை!

-

இன்றைய உலகில் தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதமானது குறைவடைந்து கொண்டு செல்வதால், குழந்தைகளைக்  பெற்றுக்கொள்ள தம்பதியினர் வாடகை தாய், செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகளைத்  தேடி வருகின்றனர்.

இந்நிலையில் செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டமாக ஜேர்மனியின் தலைநகரா  பெர்லினியில் செயற்பட்டு வரும் ‘EctoLife‘ எனும் நிறுவனம்  உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இக்கருப்பை வசதி மூலம், ஒரு வருடத்திற்கு  சுமார் 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் இதன் மூலம் மலட்டுத்தன்மையுள்ள பெற்றோருக்கு குழந்தைகள்  கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக அவர்களை  மாற்றவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது புற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு ஒரு தீர்வாக  இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில் நுட்பத்தின் மூலம் வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்ப முடியும் எனவும், அதேபோல் குழந்தையின் கழிவுகளும் உரிய விதத்தில் அகற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையானது மக்கள் தொகை சரிவால் கவலையுறும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு  பெரிதும் உதவியாக அமையும் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 30,000 கருக்களை வளர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்கும் Trump Gold Card

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிக அளவு பணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெற அனுமதிக்கும் Trump Gold Card விசா திட்டத்தைத் தொடங்கி...

தாமதமாகிவிடும் முன் உங்கள் காசோலையை செலுத்துங்கள்

மிகவும் தாமதமாகிவிடும் முன் ஆஸ்திரேலியர்கள் காசோலைகளைப் பணமாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூகத்தில் 3.5 மில்லியன் பணமாக்கப்படாத வங்கி காசோலைகள் உள்ளன. மொத்த மதிப்பு சுமார் $820 மில்லியன்...

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...