News30,000 குழந்தைகளை உருவாக்கும் செயற்கை கருப்பை!

30,000 குழந்தைகளை உருவாக்கும் செயற்கை கருப்பை!

-

இன்றைய உலகில் தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதமானது குறைவடைந்து கொண்டு செல்வதால், குழந்தைகளைக்  பெற்றுக்கொள்ள தம்பதியினர் வாடகை தாய், செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகளைத்  தேடி வருகின்றனர்.

இந்நிலையில் செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டமாக ஜேர்மனியின் தலைநகரா  பெர்லினியில் செயற்பட்டு வரும் ‘EctoLife‘ எனும் நிறுவனம்  உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இக்கருப்பை வசதி மூலம், ஒரு வருடத்திற்கு  சுமார் 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் இதன் மூலம் மலட்டுத்தன்மையுள்ள பெற்றோருக்கு குழந்தைகள்  கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக அவர்களை  மாற்றவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது புற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு ஒரு தீர்வாக  இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில் நுட்பத்தின் மூலம் வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்ப முடியும் எனவும், அதேபோல் குழந்தையின் கழிவுகளும் உரிய விதத்தில் அகற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையானது மக்கள் தொகை சரிவால் கவலையுறும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு  பெரிதும் உதவியாக அமையும் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 30,000 கருக்களை வளர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...