Newsடுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

-

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை  கைப்பற்றியதிலிருந்து, அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால் உட்பட முக்கிய பதவிகளில் கடமையாற்றி வந்த பலரை பணிநீக்கம் செய்தார்.

அத்துடன் டுவிட்டரில் அதிகாரபூர்வக்  கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக்’ குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கு  8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.

அத்துடன்  தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, பிரபல ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகளையும் முடக்கி  வருகின்றார்.

இந்நிலையில் எலோன் மஸ்கின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில்  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ”டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான்  விலக வேண்டுமா? ”என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

இக் கருத்துக் கணிப்பின் படி 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளனர்.

முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவ்வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்றும்  சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...