Newsடுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

-

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை  கைப்பற்றியதிலிருந்து, அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால் உட்பட முக்கிய பதவிகளில் கடமையாற்றி வந்த பலரை பணிநீக்கம் செய்தார்.

அத்துடன் டுவிட்டரில் அதிகாரபூர்வக்  கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக்’ குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கு  8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.

அத்துடன்  தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, பிரபல ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகளையும் முடக்கி  வருகின்றார்.

இந்நிலையில் எலோன் மஸ்கின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில்  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ”டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான்  விலக வேண்டுமா? ”என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

இக் கருத்துக் கணிப்பின் படி 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளனர்.

முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவ்வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்றும்  சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...

$250 அபராதம் வசூலிக்கும் தவறான போக்குவரத்து சட்டங்களால் ஏமாறாதீர்கள்!

போலி போக்குவரத்து விதிகள் ஆன்லைனில் பரப்பப்படுவது குறித்து ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை...

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ள வீட்டு செலவுகள்

செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வீட்டுச் செலவினங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், செப்டம்பரில் வீட்டுச் செலவு...