Newsடுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

-

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை  கைப்பற்றியதிலிருந்து, அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால் உட்பட முக்கிய பதவிகளில் கடமையாற்றி வந்த பலரை பணிநீக்கம் செய்தார்.

அத்துடன் டுவிட்டரில் அதிகாரபூர்வக்  கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக்’ குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கு  8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.

அத்துடன்  தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, பிரபல ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகளையும் முடக்கி  வருகின்றார்.

இந்நிலையில் எலோன் மஸ்கின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில்  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ”டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான்  விலக வேண்டுமா? ”என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

இக் கருத்துக் கணிப்பின் படி 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளனர்.

முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவ்வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்றும்  சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...