Cinemaமன்னிப்பு கேட்ட மனோபாலா - காரணம் என்ன?

மன்னிப்பு கேட்ட மனோபாலா – காரணம் என்ன?

-

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது ட்விட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.

அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி ட்விட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...