Cinemaமன்னிப்பு கேட்ட மனோபாலா - காரணம் என்ன?

மன்னிப்பு கேட்ட மனோபாலா – காரணம் என்ன?

-

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது ட்விட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.

அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி ட்விட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...