Cinemaமன்னிப்பு கேட்ட மனோபாலா - காரணம் என்ன?

மன்னிப்பு கேட்ட மனோபாலா – காரணம் என்ன?

-

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது ட்விட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.

அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி ட்விட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...