Newsஅதிரடி மாற்றங்களுடன் Twitter - Elon Musk அறிவிப்பு!

அதிரடி மாற்றங்களுடன் Twitter – Elon Musk அறிவிப்பு!

-

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே இடம்பெற்று வருகிறது. பொருட்கொள்வனவு முதல் அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில ட்விட்டர் பதிவுகள் செய்துள்ளார்.

அதில், “ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஒடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும். ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் ட்வீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

எனினும், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் அதனால் ட்விட்டருக்கு தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...