Newsஅதிரடி மாற்றங்களுடன் Twitter - Elon Musk அறிவிப்பு!

அதிரடி மாற்றங்களுடன் Twitter – Elon Musk அறிவிப்பு!

-

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே இடம்பெற்று வருகிறது. பொருட்கொள்வனவு முதல் அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில ட்விட்டர் பதிவுகள் செய்துள்ளார்.

அதில், “ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஒடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும். ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் ட்வீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

எனினும், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் அதனால் ட்விட்டருக்கு தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...