Newsலண்டனில் வாழ்க்கை செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் வெளிநாட்டவர்கள்!

லண்டனில் வாழ்க்கை செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் வெளிநாட்டவர்கள்!

-

லண்டனில் இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் நெடுக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். காரணம் வீட்டு வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால் பலரும் சொந்த ஊர் திரும்பியதால், பல வீடுகள் காலியாகின. 

தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் வாடகை வீடுகளுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன் தாக்கமாக வாடகையை உயர்த்துவதில் வீட்டு உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

லண்டனில் ஒரு மாத சராசரி வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 ,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சிலர் வீட்டு உரிமையாளர்கள் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 9.7 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. லண்டனில் உயர்ந்தப்பட்ட மின்சார கட்டணத்துடன், வாழ்க்கைச் செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் திண்டாடி வரும் நிலையில், வாடகை உயர்வு கூடுதல் சுமையாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல்

ஈரானில் பல அணுமின் நிலையங்கள் உள்ள நகரம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம்...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

மெல்போர்ன் பெண்கள் பள்ளி மாணவிகள் குழுவிற்கு நிகழ்ந்த அநீதி

மெல்போர்னில் உள்ள பெண்கள் பள்ளி மாணவிகள் தோலின் நிறம் காரணமாக பள்ளி புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தோல் நிறம் மற்றும் மதம் காரணமாக...