Alice Springs-ன் மதுவிலக்கு குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் முதலமைச்சருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் அல்பானீஸ் விஜயம் செய்ததன் பின்னர் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஆனால் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரம் கடுமையான மதுவிலக்கை மீண்டும் நடைமுறைப்படுத்த பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
மதுவிலக்கு நீக்கப்பட்டதையடுத்து, ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் வன்முறை அதிகரித்துள்ளதால், மீண்டும் விதிமுறைகளை நிரந்தரமாக அமல்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் சமூகத்தில் கருத்துக்கணிப்பு நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.