Sportsகால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் - மெஸ்ஸி...

கால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் – மெஸ்ஸி தெரிவிப்பு!

-

எதிர்வரும் கால்பந்து உலக கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே இருக்கும். 

அதுவும் அதில் மெஸ்ஸி விளையாடினால் அவரோடு சேர்த்து அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் துடிப்பும் அதில் இருக்கும்.

கடந்த டிசம்பரில் உலகக் கோப்பை கனவை அதே துடிப்போடு மெஸ்ஸி நிஜமாக்கினார். அர்ஜென்டினா அணியை திறம்பட வழிநடத்தி, தொடரில் தன் சார்பாக 7 கோல்களை பதிவு செய்து கோப்பையை வென்று காட்டினார். இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவையும் மாற்றிக் கொண்டார்.

எனது வயது காரணமாக 2026 உலக கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் அதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என தான் நம்புவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அவரது வாய்ப்புக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...