Sportsகால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் - மெஸ்ஸி...

கால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் – மெஸ்ஸி தெரிவிப்பு!

-

எதிர்வரும் கால்பந்து உலக கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே இருக்கும். 

அதுவும் அதில் மெஸ்ஸி விளையாடினால் அவரோடு சேர்த்து அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் துடிப்பும் அதில் இருக்கும்.

கடந்த டிசம்பரில் உலகக் கோப்பை கனவை அதே துடிப்போடு மெஸ்ஸி நிஜமாக்கினார். அர்ஜென்டினா அணியை திறம்பட வழிநடத்தி, தொடரில் தன் சார்பாக 7 கோல்களை பதிவு செய்து கோப்பையை வென்று காட்டினார். இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவையும் மாற்றிக் கொண்டார்.

எனது வயது காரணமாக 2026 உலக கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் அதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என தான் நம்புவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அவரது வாய்ப்புக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...