Sports கால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் - மெஸ்ஸி...

கால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் – மெஸ்ஸி தெரிவிப்பு!

-

எதிர்வரும் கால்பந்து உலக கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே இருக்கும். 

அதுவும் அதில் மெஸ்ஸி விளையாடினால் அவரோடு சேர்த்து அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் துடிப்பும் அதில் இருக்கும்.

கடந்த டிசம்பரில் உலகக் கோப்பை கனவை அதே துடிப்போடு மெஸ்ஸி நிஜமாக்கினார். அர்ஜென்டினா அணியை திறம்பட வழிநடத்தி, தொடரில் தன் சார்பாக 7 கோல்களை பதிவு செய்து கோப்பையை வென்று காட்டினார். இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவையும் மாற்றிக் கொண்டார்.

எனது வயது காரணமாக 2026 உலக கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் அதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என தான் நம்புவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அவரது வாய்ப்புக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...