News20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பெண்!

20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பெண்!

-

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர்(வயது 25) என்ற பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.

அதுவும் இன்று, நேற்று அல்ல கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அவர் அடிமையாகியுள்ளாராம். 

அந்த பெண் பிரபல அமெரிக்க டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் ‘என் விசித்திரமான போதை’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூறியபோதே அவரின் இந்த வினோத பழக்கம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.

தனது 5 வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும், முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறுகிறார். 

நாட்கள் செல்லசெல்ல பழக்கம் மோசமானதே தவிர, அதனை விட்டொழிக்க முடியவில்லை என்றும், தற்போது ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒருசமயம் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்தாரம் ஜெனிபர். எனினும் அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால், மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...