Newsசகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி - அமெரிக்காவில் பயங்கர...

சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி – அமெரிக்காவில் பயங்கர சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

அதில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 

இந்த நிலையில் உறவினர்களுடன் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொண்டிருந்த நிலையில் 2 குழந்தைகளும் வேறொரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்த 3 வயது பெண் குழந்தை வீட்டில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்தது. 

இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர்.

அங்கு அவர்களது 4 வயது பெண் குழந்தை குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து, குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடந்ததாக சொல்லப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

நன்றி தமிழன்

Latest news

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...