Newsஅமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு – நால்வர் பலி

-

அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. 

நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் காரணம் வெளியாகவில்லை.

மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

இன்றும் அடுத்த வாரமும் மாற்றமடையும் மெல்பேர்ண் பேருந்து சேவை அட்டவணைகள்

மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது. சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...